“மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவி செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து “மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் செல்வி.சுபி தர்ஷினி அவர்கள் கலந்து கொண்டு மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது மற்றும்,
சமாளிப்பதற்கான உதவிக்குறிப்புகளை தெளிவாக விளக்கினார். மேலும் மன அழுத்தத்திலிருந்து விடுபட 5 படிகளை எளிதாக எடுத்துரைத்தார்.
இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக வடிவீஸ்வரம் சார்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களில் சிலர் தெரிவித்தனர்.
CATEGORIES Uncategorized