மானாமதுரை அருகே கண்மாய் உடைப்பு மற்றொரு கண்மாயும் உடையும் அபாயம்.

செய்தியாளர் வி.ராஜா.
தண்ணீர் அதிகரிப்பால் சுற்றி உள்ள கண்மாய்களில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள கருப்பனேந்தல் கண்மாய்க்கு குவளைவேலி கண்மாயில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமானதால் இரவோடு இரவாக கண்மாய் உடைத்து புதுக்குளம் கண்மாய் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் 5000 ஏக்கர் பாசனம் உள்ள மிளகனூர் கண்மாயும் உடையும் நிலை உள்ளது
இங்கு கலுங்கு கண்கள் திறந்து விட்ட போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்
இதேபோல் புதுக்குளம் கண்மாய் பாதிக்காமல் இருக்க கழுங்கை திறந்து விட்டபோதும் தண்ணீர் கூடுதலாக வருவதால்,
அரசு அதிகாரிகளின் உதவியோடு மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஆனாலும் கிராம மக்கள் கலுங்கு வழியாக தண்ணீரை திறந்து விட்ட வண்ணம் உள்ளனர் தண்ணீர் அதிகமாக வருவதால் கலுங்குக்குமேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் தங்கள் கண்மாய்க்கு பாதிப்பு வருமா வராதா என்ற அச்சத்துடன் விவசாயிகள் உள்ளனர்.
இதன் காரணமாக மானாமதுரை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக விவசாயிகளுடன் சேர்ந்து போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர்.