மானாமதுரை நகராட்சி புதிய கட்டிடம் அடிக்கல் விழா, அங்கன்வாடி திறப்புவிழா அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பண் அவரகள் அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து 23வார்டில் ரூபாய் 13.00லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழா சிறப்பித்து அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிலையில் மானாமதுரை நகராட்சி ஈடுகாட்டில் மின்மயானம் 150லட்சம் செலவில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி ரூ.100லட்சம் ஒதுக்கியதை தொடர்ந்து இன்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வினை தலைமை ஏற்று சிவகங்கை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகநாதன் தொகுத்து வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி அவர்கள் பேசியதாவது மானாமதுரை நகராட்சியில் பல நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது என எடுத்துரைத்து பேசினார்.
இந்த விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் பேசுகையில் திமுக அரசு மக்களுக்குகான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு செய்து வருகிறது என பேசினர்.
இவ்விழாவில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, மானாமதுரை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகர்மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையர் சக்திவேல,
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதாஅண்ணாத்துரை, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திமுக கழக பொருளாலர் மயில்வாகனன், திமுக மானாமதுரை வட்ட பிரதிநிதி சிவராமன், 23வார்டு நகர்மன்ற உறுப்பினர் மன்னர் மன்னன், 5வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் புருசோதமன், 5வது வட்ட கழகசெயலாளர் பாலாசுந்தரம்,
அரசுதுறை சார்ந்த அதிகாரிகளும் , நகராட்சி அலுவலக நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.