BREAKING NEWS

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் எல்ஐசி, எஸ்பிஐ, வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் எல்ஐசி, எஸ்பிஐ, வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மத்திய பி.ஜே.பி. அரசை கண்டித்தும் எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ வங்கிகள் அதானி குழுமம் கார்ப்பரேட் கம்பெனிக்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

சிவகங்கை மாவட்டதலைவர் ப.சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் மத்தியில் ஆளக்கூடிய பி.ஜே.பி. அரசைக் கண்டித்தும். எல்.ஐ.சி எஸ்.பி.ஐ.வங்கிகள் ஏழை எளிய மக்களின் நலன்களை கருதாமல் அதானி என்ற கார்ப்பரேட் முதலாளிக்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் வாரிகள் வழங்கியதற்காகவும் எதிர்ப்பு தெரிவித்து.

 

மானாமதுரை எல்.ஐ.சி அலுவலகத்தின் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதது.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை கண்டித்து மாவட்ட நகர, வட்டார மகளிர் அணி, பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டு கண்டன உரையையும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 

CATEGORIES
TAGS