BREAKING NEWS

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தின தினம் அனுசரிப்பு செம்பனார்கோவிலில் அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தின தினம் அனுசரிப்பு செம்பனார்கோவிலில் அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி.

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் திருவுரு படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அதற்கு மலர் மாலைகள் தீபங்கள் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் அதிமுக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து காளகஸ்திநாதபுரத்தில் இருந்து மயிலாடுதுறை – திருக்கடையூர் பிரதான சாலை வழியாக ஊர்வலமாக சென்று செம்பனார்கோவில் கடைவீதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

 

முன்னதாக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சங்கரன்பந்தல் கடை வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் கழகத் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்.

 

 

இந்நிகழ்ச்சிகளில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி.ஜி.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கபடி ஆர்.பாண்டியன், மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் எம்.ஆர்.எஸ்.ஷங்கர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்தி, மயிலாடுதுறை மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், நடுக்கடை அதிமுக ஊராட்சி மன்ற தலைவருமான பிரேம் குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )