முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் துரைராஜ்,மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர் காஜாமலை விஜி, இளங்கோ, கமால் முஸ்தபா கழக நிர்வாகிகள் நாகராஜ் கலந்து கொண்டு முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
CATEGORIES திருச்சி