மோடி என்கிற பிம்பமும் உடையக்கூடியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சுற்று பயணம் செய்து வருகிறார். கும்பகோணத்தில் சுற்றுப்பயணம் செய்த கே.எஸ். அழகிரி நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கினார்.
முன்னதாக கும்பகோணத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி கூறியதாவது;-
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ் அன்னை சோனியா காந்தியை பிரதமராக வலியுறுத்தியும் பிரதமர் பதவியை துறந்த சிறந்த தலைவரின் பிறந்தநாளில் ஒரு சட்டமன்ற தொகுதியில்100 இடங்கள் என 23,400 இடங்களில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்,இந்த திட்டத்தினால் 25 சதவீத வாக்கு வங்கிகளை பெற கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் மழையில் தண்ணீர் தேங்காமல் சாதனை செய்தது போல் புயல் பேரிடர்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது மேலும் வளர்ச்சி திட்டங்களிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவின் இறங்கு முகம் இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் எதிரொலி த்து வருகிறது. குஜராத் வெற்றி நீர்க்குமிழி வெற்றி, மதவெறியை தூண்டி பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் கூட அச்சமூட்டி வெற்றி பெற்றுள்ளது.
வட இந்தியாவில் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற்றிருப்பது வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கனியை பறிக்கும். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காங்கிரஸில் ஆளுமை இருந்தும் மோடி என்ற பிம்பம் உடைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பிம்பம் என்பது உடைய கூடியது தான் அதுபோல் மோடி என்கிற பிம்பமும் உடையக்கூடியது என பதில் அளித்தார்.