ரோட்டரி அன்னபூர்ணா திட்டம் கும்பகோணம் மாநகராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்வு ரோட்டரி தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட முன்னாள் ஆளுநர் பாலாஜி முன்னிலை வகித்து தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில். மாநகராட்சி உறுப்பினரும் சுகாதாரத் துறை தலைவர் குட்டி தட்சிணாமூர்த்தி மாவட்ட துணை ஆளுநர் பிரபாகர்,மாநகர் நல அதிகாரி பிரேமா சுகாதார ஆய்வாளர் மணிகண்டன்,ரோட்டரி சங்கத்தின் செயலாளர் ராம்பிரசாத் மற்றும் பொருளாளர் அருண்குமார். முன்னாள் சங்க தலைவர் ராஜா, ரோட்டரி சங்க நிர்வாகி சதீஷ் திட்ட ஆலோசகர் கஜேந்திரன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கி கலந்துகொண்டனர்.