லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கொத்தனார் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை நெடுஞ்சாலைகுடியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் ராஜா இவர்கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பெயர் நித்யா இவருக்கு ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
அவர்கள் குடும்பத்தில் சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மேளவாளாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
CATEGORIES திருச்சி