லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சுரேஷ் (42 ). இவர் சொந்தமாக கோழி பண்ணை நடத்தி வருகிறார்.
இவர் இன்று கோழிப்பண்ணையில் இருந்த போது எதிர்பாராத விதமாக இவர் மீது மின்சாரம் தாக்கியது.அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த சுரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
CATEGORIES திருச்சி
TAGS குற்றம்கோழி பண்ணை மீது மின்சாரம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்நன்னிமங்கலம் கிராமம்லால்குடி
