BREAKING NEWS

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.

 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை என, பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தெரிவித்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கட்ரமணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், பேரூராட்சி பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து கடந்த மாதம் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், பேரூராட்சியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என, அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து பேசினர். இதுகுறித்து, அன்றைய நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது.

 

 

இது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுபோன்று ஒவ்வொரு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள், திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற தலைவராக இருக்கும் பேரூராட்சி நிர்வாகத்தையும், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களையும், கவுன்சிலர்கள், பேரூராட்சியில் பெரும்பாலான பணிகள் நடைபெறவில்லை என, கடுமையாக பேசி வருவதால்,

 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, பேரூராட்சி மன்ற கூட்டத்தில், திமுக கவுன்சிலர்களின் விவாதங்களை பதிவு செய்து கொண்டிருந்தபோது, வீடியோ மற்றும் போட்டோ எடுக்க பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என, பேரூராட்சி மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த சிதம்பரம் தெரிவித்துவிட்டார்.

 

தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள குறைகளை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் செய்தியாக வெளியிட்டு வருவதால், அது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி விடும் என்பதால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் வெளியில் இருந்தபோது, கூட்ட அறையில் கவுன்சிலர் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, அதிக சத்தத்துடன் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் ம.ராஜா.

CATEGORIES
TAGS