BREAKING NEWS

வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் கோவிந்தராஜி தலைமையில் நடந்தது.

 

ஊராட்சி செயலாளர் குமரேசன் வரவேற்றார்.கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். அரிமா உழவன் R.முருகன்.M.A. சிறப்புரை ஆற்றினார் வாழப்பாடியில் இருந்து துக்கியாம்பாளையம் மேலூர் மாரியம்மன்புதூர் மேலக்காடு சமத்துவபுரம் வழியாக பள்ளத்தாதனூர் சென்று வந்த அரசு பேருந்து இரண்டு வருடமாக நிறுத்தப்பட்டது இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பெண்கள் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.

 

 

இதனால் இந்த வழிதடத்தில் உடனடியாக அரசு பேருந்து இயக்கவேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

ஒரு வாரத்தில் அரசு பேருந்து இயக்கா விட்டால் வாழப்பாடியில் உள்ள அரசு பேருந்து டெப்போ முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்யபட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )