BREAKING NEWS

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை திருவிழா.!

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை திருவிழா.!

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர் மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் தனித் திறனை வெளிப்படுத்தினர்.

 

இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் திமுக நல்லூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்ருமான தங்க நாராயணசாமி தலைமை தாங்கினார்.

 

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் முன்னிலை வகித்தார். உயர்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். 

 

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் நகர் சி சக்தி விநாயகம் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி போதை பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

 

மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அய்யாவு, துவக்க பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜிலு, ஆசிரியர் கருப்பையா, வேப்பூர் முன்னாள் கவுன்சிலர் சோலை ராஜன் மற்றும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )