BREAKING NEWS

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், சிவகாசி அருகே செவல்பட்டி பி எஸ் ஆர் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேரும் கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

 

இதில் காரில் பயணம் செய்த கோவில்பட்டியை சேர்ந்த தனியார் கல்லூரி 3 ம் ஆண்டு மாணவர்கள் செந்தில் குமார், அஜய், கீர்த்திக், ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்கள் அருண்குமார், விக்னேஷ், பேருந்தில் பயணித்த கூலித் தொழிலாளி மாடசாமி உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

 

 

விபத்து குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூன்று பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

காயமடைந்தவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS