வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் ஆறுமுகம் வயது 60 என்பவர் இன்று தனது சைக்கிளில் வேப்பூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி ராஜாமணி என்பவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ரோட்டில் வேர்க்கடலையை காய வைத்து அதன் அருகில் அமர்ந்திருந்தார்.
அவ்வழியே வந்த ஆறுமுகம் சாலையில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதாலூம் எதிரே இருசக்கர வாகனம் வந்ததாலும் ஒதுங்கி செல்ல முற்பட்டபோது காய வைத்த கல்லை மீது ஏற்றி நிலை தடுமாறி அங்கு அமர்ந்திருந்த ராஜாமணி மீது மோதி ஆறுமுகம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ராஜாமணி க/பெ கருப்பையா என்பவரின் மகன் சிவகணேசன் (30), ஆறுமுகம் வீட்டிற்கு சென்று ஆறுமுகத்திடம் எனது அம்மா மீது ஏன் சைக்கிளில் மோதினாய் என்று கேட்டு கன்னத்தில் அறைந்து, நெஞ்சில் கையால் பலமாகக் குத்தியுள்ளார்.
இதனால் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார், மயங்கி விழுந்த ஆறுமுகத்தை அவரது உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்று அனுமதித்தனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆறுமுகத்தை தாக்கிய சிவ கணேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.