BREAKING NEWS

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்.

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்.

குற்றவாளிகளை கைது செய்து இரு சக்கர வாகனத்தை மீட்கும் போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து போலீஸ் அதை சுட முயன்றால் குற்றவாளிகளை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர் என காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தகவல்..

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது.

 

இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மேற்கண்ட சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.

 

இந்த தொழிற்சாலைகளில் அதிகளவு பெண்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி இரவு தமிழக காவல்துறை கட்டுபாட்டில் உள்ள காவலன் செயலியில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

 

 

அதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி அதேபகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். வெங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

 

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் தாங்கள் போலிஸ் என கூறி, உன்மீது சந்தேகம் உள்ளது காவல் நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மர்ம நபர்கள் காக்கி பேண்ட், கையில் வாக்கி டாக்கி வைத்திருந்துள்ளனர். இதனால் அவர்கள் போலிஸ் என நம்பி இளம் பெண் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார்.

 

அப்போது ஸ்ரீபெரும்புதூரை கடந்து செல்லவே இளம் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

 

 

இதுகுறித்து அந்த பெண், காவல் துறை கட்டுபாட்டில் உள்ள காவலன் செயலியில் புகார் அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

மேலும் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர்.,நகரில் இருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து வலிபர்களை தேடி வந்தனர்.

 

குற்றவாளி பிடிக்க காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (31), திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (31) என்பவர் தெரிய வந்த நேரத்தில் அவர்கள் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில் அருகே குற்றவாளிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை மீட்க செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியை குற்றவாளி நாகராஜ் எடுத்து போலீசை பார்த்து சுட்டதாகவும், பதிலுக்கு போலீசார் திருப்பி குற்றவாளி நாகராஜ் காலில் சுட்டு பிடித்தனர், உடன் இருந்த பிரகாஷ் தப்பிக்க முடிந்தபோது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தகவல் தெரிவித்தனர்.

 

இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

கடந்த இரண்டு இடங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்திகள் வந்த நிலையில் திடீரென்று என்று துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளி பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

CATEGORIES
TAGS