ஸ்ரீமுஷ்ணத்தில் திமுகவினர் அண்ணாமலை உருவ பொம்மைக்கு தீ வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி காமராஜர் சிலை அருகில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் உருவப்படத்திற்கு தீ வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூருக்கு நேற்று முன்தினம் வந்த பாஜகவின் தலைவர் அண்ணாமலை அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளை பற்றி கூறிக் கொண்டிருந்த அவர் திடீரென திமுக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர், தமிழக வேளாண்துறை அமைச்சராகவும் இருக்கின்ற எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை இழிவாகவும் தரம் குறைவாகவும் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேடையில் பேசினார்.
இதில் கோபமடைந்த திமுகவினர் கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அண்ணாமலையை கண்டித்து, உடனடியாக தவறு செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகவும் அண்ணாமலையின் உருவ பொம்மையினை செய்து செருப்பு காலால் மிதித்தும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் திமுகவினர் கடும் கோபத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மேலும் இதில் தலைமை நகர செயலாளர் செல்வக்குமார், அவைத்தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் பார்த்திபன், நகர நிர்வாகி முத்துராமலிங்கம், பேரூராட்சி உறுப்பினர் பன்னீர் செல்வம், ஜேம்ஸ், இளைஞர் அணி வீரவேல், மாவட்ட மாணவர் அணி சதீஷ்குமார்,
நகர மாணவரணி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பரமதயாளன், சோழதரம் தலைவர் ராஜவேல் கிளை நிர்வாகிகள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீமுஷ்ணம் காவல்துறை ஒத்துழைப்புடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
News publicity is a very like wonderful news fast coming to Aram news thank you