அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 13 லட்சம் மதிப்பிலான பள்ளி வாகனத்தை பள்ளி பெயரில் வாங்கிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுவினர்.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வரும் நிலையிலும் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் விதமாகவும் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் விதமாகவும் பள்ளி கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளியை பாதுகாக்கும் விதமாகவும்,
ஆசிரியர்கள் கிராம மக்கள் ஒன்றிணைந்து பள்ளியில் வாகனங்கள் வாங்கி கொடுக்கும் நிலையில் தஞ்சை ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட பூவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் பூவை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் 13 லட்சம் ரூபாய் செலவில் பேருந்தினை பள்ளி பெயரில் வாங்கி கொடுத்துள்ளனர்.
பேருந்து பராமரிப்பு மற்றும் இதர செலவுகளையும் இந்த குழுவை பார்க்கும் எனவும் கூவத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள 11 கிராமத்திலிருந்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வரவும் அழைத்துச் செல்லவும் பேருந்து பயன்பட உள்ளது.
இந்த பேருந்து மூலம் நாளொன்றுக்கு 180 மாணவ மாணவிகளை நான்கு சிட்டாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளியில் மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கவும் உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து பயனடையவும் முடியும் என தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள் மாணவர்கள்.