அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த நாகல்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் பால்குடம் திருவிழா நடைபெற்றது.
இந்த கோவிலில் செங்க முனீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்ளன.
இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டில், செங்கா முனீஸ்வரருக்கு முன்பதாகவே மாலை அணிந்து 48 நாள் கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் முன்னதாகவே செங்க முனீஸ்வரருக்கு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிவப்பு நிறம் ஆடை அணிந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து அலகு குத்தி முக்கிய வீதி வழியாகஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில்பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்