ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.

88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.
தூத்துக்குடி மாவட்டம்; தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு – மூதாட்டியை மீட்டு பத்திரமாக அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.
நேற்று (08.04.2023) இரவு தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக தெர்மல்நகர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு. செல்வின்ராஜா அவருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த மூதாட்டியை மீட்டு அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் அவரிடம் பெயர் முகவரி விசாரித்ததில் அவர் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜே.எஸ் நகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (88) என்பதும் அவருக்கு இரண்டு மகன் இரண்டு மகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து உடனடியாக தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் செல்வின்ராஜா முத்தையாபுரம் தனிப்பிரிவு காவலர் ஜான்சனை தொடர்பு கொண்டு மேற்படி தகவல் கூறி விசாரணை செய்ததில் மேற்படி மூதாட்டி ஜே.எஸ் நகரில் உள்ள அவரது மகன் சுந்தரவேலு வீட்டில் இருந்து தன்னிச்சையாக வெளியே வந்து முத்துநகர் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் செல்வின்ராஜா ஒரு ஆட்டோ மூலம் மூதாட்டியை பத்திரமாக மீட்டு தனிப்பிரிவு காவலர் ஜான்சனுடன் ஜே.எஸ் நகரில் உள்ள அவரது மகன் சுந்தரவேலு வீட்டிற்கு அழைத்து சென்று அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
மேற்படி ஆதரவின்றி தெருவில் சுற்றித்திரிந்த 88 வயது மூதாட்டியை பத்திரமாக மீட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த தனிப்பிரிவு காவலர்கள் செல்வின்ராஜா, மற்றும் ஜான்சன் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.