BREAKING NEWS

இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 10,00,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…

இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 10,00,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, வைகை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (32) என்பவரின் வங்கி கணக்கில் தொலைபேசி எண் மாற்றம் செய்து ரூபாய் 10,00,000/- பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இந்நிலையில் கோடீஸ்வரன் பணத்தை மீட்டுத்தருமாறு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ்., அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. தேவி அவர்கள், தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக கோடீஸ்வரன் என்பவருடைய ரூபாய் 10,00,000/- பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ்., அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 10,00,000/- பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்து சிறப்பான முறையில் பணிபுரிந்ததற்காக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. செல்வராஜ்., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

CATEGORIES
TAGS