இந்து முன்னணி சார்பில் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அருகே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஜி அவர்கள் உத்தரவின் பேரில் இன்று 27/04/2023 காலை 10 மணியளவில் தண்ணீர் பந்தல் அமைத்து இந்து முன்னணி சார்பில் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் நீர்மோர், தர்பூசணி வழங்கினர் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர்.
ராஜேஷ் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.கே மோகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் வாலாஜா ஒன்றிய தலைவர் பார்த்திபன். வாலாஜா ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தயாநிதிமாறன், ரமேஷ் பாபு, இந்து முன்னணி வியாபாரி நல சங்கத்தினர் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.