BREAKING NEWS

உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா. கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா. கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி அருகே அருள்மிகு உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா- முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தீர்த்த குடம் எடுத்தல் அக்னி எடுத்து ஊர்வலம் வந்து. அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரணங்கள் நடைபெற்றது.

 

இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வகுமார்,

 

ஆலம்பட்டி தெற்கு தெரு கிளை செயலாளர் முருகன், ஆலம்பட்டி தெற்கு தெரு கிளை பிரதிநிதி கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முருகன், கோபி, பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS