எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்த அரியலூர் மாவட்ட இணை செயலாளர் கண்ணகி குப்புசாமி வைத்திலிங்கம் காலில் விழுந்து அவருக்கு சால்வை அணிவித்து ஒபிஎஸ் அணியில் இணைந்து கொண்டார்.

அரியலூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக இருப்பவர் கண்ணகி குப்புசாமி. இவர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார், இந்நிலையில், கண்ணகி குப்புசாமி, தஞ்சையில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வந்து ஒபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் காலில் விழுந்து அவருக்கு சால்வை அணிவித்து தன்னை ஒபிஎஸ் அணியில் இணைத்து கொண்டார். கழகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ஒபிஎஸ் தெரிவித்ததால் இணைந்து கொண்டதாக கண்ணகி குப்புசாமி தெரிவித்தார்
CATEGORIES Uncategorized
