எல்ஐசி முகவர்கள் சங்க பெரியகுளம் கிளை நிர்வாகிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு எதிராக உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக எல்ஐசி முகவர்கள் சங்க பெரியகுளம் கிளை நிர்வாகிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு எதிராக உள்ள லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கிளை அலுவலகத்திற்கு முன்பாக lic முகவர்கள் சங்க பெரியகுளம் கிளை நிர்வாகிகள் சார்பாக பெரியகுளம் கிளை செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் பொருளாளர் கலைசெல்வன் முன்னிலையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளாவது பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி தரவேண்டும், பணிக்கொடை உயர்த்தி தரவேண்டும், மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்,

குழு காப்பீடு வயது மற்றும் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் கமிஷனை 2.5% உயர்த்தி தரவேண்டும்,பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
