ஓடாத வாகனத்திற்கு லட்சக்கணக்கில் எரிபொருள் நிரப்பியாதாக கணக்கு கட்டியதால் கவுன்சிலர்கள் ஆவேசம்.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, சண்முகசிகாமணி(கிஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிவக்குமார், மேகராஜன் ஆகியோர் தங்களது பகுதி நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.
அப்போது கடந்த நான்கு ஆண்டுகளாக சேர்மனின் சொந்த வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பும் செலவை, பழுதடைந்து கிடக்கும் ஓடாத அரசு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதாக லட்சக்கணக்கில் கணக்குக் காட்டுவது சரியில்லை என்றும் கடந்த நான்காண்டுகளாக நடைபெறும் அத்தனை கவுன்சிலர்கள் கூட்டத்திலும் இதனை சுட்டிக்காட்டியும் எந்த பயனும் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காது என்று கூறினார்.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.