BREAKING NEWS

ஓமலூர் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

ஓமலூர் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பாகல்பட்டி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி மற்றும் லயம் குரூப் ஆப் கம்பனிஸ் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வேலை வாய்ப்பு முகாமினை கொன்சாகா சபையின் தலைமை அன்னையும், கல்லூரியின் தலைவர் ராஜாமணி தலைமையேற்று துவங்கி வைத்தார்.

இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த 10 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை கல்லூரியின் செயலர் முனைவர் ஆண்டனி மரிய ஜான்சி வரவேற்று பேசினார்.

மேலும்,இந்த தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறினார்கள்.

நேர்முகதேர்வு மற்றும் மூன்று சுற்றுகளாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் என கலந்து கொண்டனர்.

முகாமில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இம்முகாமிற்க்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகி அருட்சகோதரி ரீத்தா மேரி, கல்லூரி முதல்வர் முனைவர் அமீர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும்,இவ்வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

CATEGORIES
TAGS