BREAKING NEWS

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் காவலர் ரங்கன் ஏழுமலை மற்றும் போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி காவலர் மதன்குமார் கொண்ட குழுவினர் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

 

 

அப்பொழுது அட்டியாவிலிருந்து எஸ்வந்த்பூர் வரை செல்லும் விரைவு ரயில் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபர்கள் விசாரித்த பொழுது அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

 

இதனை அடுத்து 10 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா கடத்தி வந்த அஜித் என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS