காரைக்கால், சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க, போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம், வீடு ஒன்றினை மாணவன் தந்தையிடம் ஒப்படைத்தார்.

காரைக்காலில் சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும்வகையில்,
வாடகை வீட்டில் குடியிருந்து வரும் அவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் அறிவுறுத்தியதன்பேரில்,
மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம் அவர்கள், இன்று(09.09.2022) மாலை, காரைக்காலில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒன்றினை மாணவன் பாலமணிகண்டனின் தந்தையிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வின்போது துணை மாவட்ட ஆட்சியர் திரு ஆதர்ஷ், வட்டாட்சியர் திரு.மதன்குமார், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவனின் உறவினர்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES Uncategorized
