கூடலூர் குமுளி சாலையில் கா்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தேனி மாவட்ட செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் கூடலூரில் முல்லைப் பெரியார் அணை கட்டிய ஜான் பென்னிகுக் அவர்களின் 182 வது பிறந்த நாளை ஒட்டி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பாக சங்கத் தலைவர் எஸ் ஆர் தேவர் தலைமையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி பந்தயம் கூடலூரில் இருந்து குமுளி செல்லும் பைபாஸ் சாலையில் போட்டிகள் நடத்தப்பட்டது இந்தப் போட்டியில் தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடு மாடு, பெரிய மாடு,புள்ளிமான், ஆகிய 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது.
கம்பம்,கூடலூர், கேகே பட்டி, தேவாரம் ,சின்னமனூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர்.
காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை, வழங்கப்பட்டது.
கூடலூர் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் உடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில் கூடலூர் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை, விவசாய சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் ,ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை ஒட்டி கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.