கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி திமுக அரசை கண்டித்து தமிழக- கேரள எல்லையான புளியரையில் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி திமுக அரசை கண்டித்து தமிழக- கேரள எல்லையான புளியரையில் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்: 150 பெண்கள் உட்பட 300 பேர் பங்கேற்பு!
தமிழக-கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக அண்டை மாநிலமான கேரளாவிற்க்கு எம்சாண்ட் மணல், ஜல்லி, குண்டு கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் திமுக அரசசை கண்டித்து டாக்டர் அய்யாத்துரை பாண்டியன் பேரவை சார்பில் புளியரையில் உள்ள சோதனை சாவடி அருகில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.
சமூக ஆர்வலர் அய்யாத்துரைப் பாண்டியன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 150 பெண்கள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.