BREAKING NEWS

கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மாயில் அடுத்த துருகம கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவருக்கு சொந்தமாக 50 வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார் இந்த நிலையில் ஆடுகள் துருகம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துக் கொண்டு போய் வந்தார் ஆடுகள் நாள்தோறும் வழக்கம் போல் வீட்டின் அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்து.

 

 

வருவதுண்டு இந்த நிலையில் நிலையில் நேற்று மேச்சலுக்கு சென்ற ஆடைகள் பகல் 12 மணிக்கு வீட்டுக்கு வந்து தண்ணீர் தொட்டியில் 13 ஆடுகள் தண்ணீர் குடித்துள்ளது தண்ணீர் பருகிய சிறிது நேரத்தில் 13 ஆடுகள் கீழே சுருண்டு விழநது இறந்து போனது. இந்த சம்பவம் குறித்து ரவியின் மனைவி கஸ்தூரி அருகிலுள்ள கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கே வி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகள் மர்மமான முறையில் எப்படி இறந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

இறந்த ஆடுகளின் உரிமையாளர் ரவி உயிரிழந்த தனது ஆடுகளை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி காண்பவரின் நெஞ்சை உருக வைத்தது. மேய்சலுக்கு சென்று விட்டு வந்த 13 ஆடுகள் வீட்டின் அருகே வழக்கம் போல் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரத்தில் மர்மமான முறையில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS