கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கரைவெட்டி கிராமத்தில் புற்று மண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம இளைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். புற்று மண் குளியலுக்கு புற்று மண் ணை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீர் தெளித்து ஊறவைக்க வேண்டும்.
பின்னர் காலையில் இளம் வெயிலில் ஊறிய புற்று மண்ணை தலை முதல் கால் வரை உடல் முழுக்க பூசிக் கொண்டு உடலில் நன்கு காய்ந்த உடன் தண்ணீரில் குளித்து விட வேண்டும். இதனால் நம் உடலில் தேவையில்லாமல் தேங்கிய நாட்பட்ட கழிவுகளை வியர்வை துளிகள் வழியாகவும் மலம் சலம் வழியாகவும் வெளியேறச் செய்ய உதவும். மேலும் நம் உடலில் இறந்து போன செல்களை விரைவாக வெளியேற்றிட உதவும். புதிய செல்களை உருவாக்கிடவும் உதவும் என்றார். வாழை இலை குளியல் என்பது முழு நீள வாழை இலைகளை நம் உடலை முழுவதுமாக மறைக்கின்ற வகையிலும் காற்று உள்ளே புகாத வண்ணம் லேசாக வாழை நார் கொண்டு கட்டி விட வேண்டும். காலை இளம் வெயிலில் வாழை இலை குளியல் எடுக்க உடலில் உள்ள கழிவுகள் வியர்வையாக வெளிவரும். வியர்வை நன்கு வந்தவுடன் வாழை இலையை எடுத்து விட வேண்டும். இந்த வாழை இலை குளியலுக்கு பயன்படுத்திய வாழை இலையை கால்நடைகள் தொடாத வண்ணம் மண்ணில் புதைத்து விட வேண்டும். பெண்களுக்கு கருப்பை தொந்தரவுகளை போக்குவதில் வாழை இலை குளியல் சிறந்த மருத்துவ குணமிக்க சிகிச்சை என்றும் இன்றளவும் தீப்புண்ணுக்கு வாழை இலையில் படுக்க வைக்கும் வழக்கம் நவீன மருத்துவத்திலும் உண்டு என்றார். எனவே கோடை காலத்தில் அனைவரும் இது போல சிகிச்சை எடுத்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
செய்தியாளர் D. வேல்முருகன்.