BREAKING NEWS

கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளால் மதுபான பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளால்  மதுபான பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளால் மதுபான பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். – கரூரை சேர்ந்த கும்பல் மாமூல் கேட்டதாகவும் மாமுல் தர மறுத்த பார் உரிமையாளர்களை மிரட்டி பணிய வைப்பதற்காக குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளின் துணையோடு பூட்டி இருப்பதாகவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள்(பார்கள்) செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் பார் உரிமையாளர்களிடம் கரூரை சேர்ந்த ஒரு கும்பல் மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் மாமூல் தொகை கேட்டதாகவும் , அதற்கு பார் உரிமையாளர்கள் தர மறுத்துள்ள நிலையில் இன்று திடீரென சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பார் உரிமையாளர்கள் சிலர் கூறுகையில்….
கரூர் கும்பல் கேட்ட தொகையை பார் உரிமையாளர்கள் மாமூலாக தரவில்லை என்பதால் இது போன்ற நடவடிக்கை எடுத்து தங்களை மிரட்டுவதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே பார் டெண்டர் எடுக்கும் போது மூன்று மாதத்திற்கான தொகையாக 3 லட்சத்து 60 ஆயிரத்தை டி.டி. யாக எடுத்து கொடுத்துள்ளோம் மாதம்தோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் டெண்டர் தொகையை செலுத்துகிறோம். இதுபோக பார் கடை வாடகை மாதந்தோறும் 15 ஆயிரம் , ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், இதர செலவுகள் என ஐம்பதாயிரம் வரை செலவு செய்கிறோம். ஒரு மாதத்துக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்த பிறகு தான் எங்களது லாபத்தை பார்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் கரூரை சேர்ந்த ஆளுங்கட்சி கும்பல் மாதம் தோறும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாமூல் கேட்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. மாமுல் தர மறுத்த காரணத்தினால் பார் உரிமையாளர்களை மிரட்டுவதற்காக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடைகளை மூட வைத்துள்ளனர்.இதை கடுமையாக எதிர்க்கிறோம். தவறான அணுகுமுறையால் டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர் என குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறிப்பாக பார் உரிமையாளருக்கும் கரூர் கும்பலுக்கும் நடக்குது பிரச்சனை இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மார்க் கடைகளை மூடுவதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு வந்துள்ளது. கருர் கும்பலுக்கும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூட்டு சேர்ந்து அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு துறையைச் சேர்ந்த அதிகாரி இந்த செயலில் ஈடுபடுவது.கேலிக்குத்தாக உள்ளது.
இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS