BREAKING NEWS

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,

கடந்த 23.05.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலில் தொந்தரவு கொடுத்த சங்கராபுரம் வட்டம், வடகீரனூர் கிராமத்தைச் சேர்ந்த நிஷார்(50) த/பெ ஷேக் மதார் என்பவர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட புலன் விசாரணை முடித்து, எதிரியின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் இன்று 06.விழுப்புரம் POCSO நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திரு மதி ஹெர்மிஸ் அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் நிஷார் என்பவர் குற்றவாளி என்று உறுதி செய்து, 4 ஆண்டுகள் 1 மாதம் சிறை தண்டனையும் மற்றும் 16,000/- ரூபாய் அபராதமும் தண்டனையாக அறிவித்தார்.

இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு *கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS