BREAKING NEWS

செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்மறியல்.

செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்மறியல்.

 

செங்கே ஷங்கர். செங்கல்பட்டு

காஞ்சிபுரம் திருமால்பூர் இடையே இடி மின்னல் காரணத்தால் மின்வயர் அறுந்து விழுந்ததால் அனைத்து ரயில்களும் தாமதமாக வந்தடைந்தது.

 

குறிப்பாக தினசரி காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூரிலிருந்து செங்கல்பட்டு ரயில்நிலையத்திற்கு வரவேண்டிய 8.10- திருமால்பூர் சென்னை கடற்கரை விரைவு ரயில் உரிய நேரத்தில் வராததால் வேறு வழியின்றி செங்கல்பட்டில் இருந்து தினசரி 8.40 மணிக்கு கடற்கரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நிற்கக்கூடிய சாதா ரயிலை விரைவு ரயிலாக மாற்றியமைத்ததால் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிக்கு செல்லும் பயணிகள் இந்த ரயிலில்தான் தினமும் செல்கிறோம்.

 

 

இந்த ரயிலில் சென்றால்தான் உரிய நேரத்தில் நாங்கள் பணிக்கு செல்லமுடியும் ஆகையால் இந்த ரயிலை விரைவு ரயிலாக மாற்றக்கூடாது என வாக்குவாதம் ஏற்ப்பட்டு சிறிது நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று எப்போதும் போல் மீண்டும் அனைத்து ரயில் நிலையங்களில் நிற்கும் ரயில் சேவையாக இயக்கப்பட்டது. இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )