BREAKING NEWS

சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,! 

சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,! 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமம், அண்ணா நகர் வீரா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ(49). இவர் ஸ்ப்ரிங் டேஸ் பள்ளி பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் ஜீவா என்பவருக்கும் திருமணம் ஆகி அர்ச்சனா மற்றும் காயத்ரி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது.

இந்நிலையில் மூத்த மகள் அர்ச்சனா திருமணமாகி ராஜ்குமார் என்பவருடன் ராஜு வசித்து வரும் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். இளைய மகள் காயத்ரி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜூவின் மனைவி ஜீவா கடந்த 22. 5. 2021 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். ஜீவாவின் மறைவுக்கு பின்னர் ராஜூவின் இரண்டு மகள்களும் அவர்களது கணவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ராஜூவை சரிவர பார்த்துக் கொள்ளவில்லையாம்.

அத்துடன் ராஜூவை பார்த்துக் கொள்ள சுந்தரா என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக ராஜூவே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சுந்தராவை திருமணம் செய்து கொண்டதால் ராஜூவின் இரண்டு மகள்களும் தந்தை மீது கடுமையான கோபம் கொண்டு மேற்கண்ட விலாசத்தில் உள்ள வீட்டினை மகள்கள் ஆகிய தங்களுக்கு இருவருக்கும் பிரித்து தருமாறும் பத்திரம் எழுதி தருமாறும் தந்தையை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி வீட்டினை சுந்தரா என்ற ராஜூவின் இரண்டாவது மனைவிக்கு எந்த பாகமும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 17.5.2025 அன்று அனைத்து சொத்துக்களுக்கும் நான் தான் வாரிசு, ஆனால் எனது மூத்த மகள் அர்ச்சனா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் ஆகியோர் ராஜூவை ஆபாசமாக பேசி அடித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.

வீட்டிலே அவரை அடித்து போட்டு விட்டு ரத்தக்காயம் ஏற்படுத்திவிட்டு வீட்டை பூட்டிச் சென்று விட்டனர். இதனால் ராஜூவிற்கு தலை, கை, கால், முதுகு என அனைத்து இடத்திலும் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கதவை கோடரியால் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார் ராஜூ.

இந்நிலையில் காட்பாடி போலீசார் அதாவது காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ராஜூவின் மகள் அர்ச்சனா மற்றும் மருமகன் ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை காட்பாடி எஸ். எஸ். ஐ.மனோகர் விசாரணை நடத்தி ராஜூவின் மருமகன் ராஜ்குமாரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

ராஜூவின் மகளை அதாவது அர்ச்சனாவை கைது செய்யாமல் இருக்க அவரிடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு அவரை கைது செய்யாமல் விட்டுவிட்டார். இது குறித்து தன்னை அடித்து கொலை செய்து விட்டு சொத்தை அபகரிக்க பார்க்கிறார்கள் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனை சந்தித்து ராஜூ ஒரு புகார் மனுவை அளித்தார்.

இதற்கிடையில் ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் கொலை முயற்சி வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று மீண்டும் ராஜூவை அடித்து மிரட்டுகிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப்படித்தான் இருக்கும் சென்றுவிடு என்று காவல் நிலையத்துக்கு செல்லும் ராஜூவை நாயை அடித்து விரட்டுவது போல் விரட்டுகிறாராம் இந்த எஸ் எஸ் ஐ மனோகர் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி புகார் கொடுத்தவரையே அடித்து விரட்டும் காவல் நிலையத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு காட்பாடி காவல் நிலையத்தில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. பணம் கொடுப்பவருக்கு நீதி நியாயம் கிடைக்கிறது என்றால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த நியாயமும் கிடைப்பதில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது. ராஜூவை தாக்கிய மகள் அர்ச்சனா மற்றும் மருமகன் ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தனது இரண்டாவது மனைவி சுந்தராவிற்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராஜு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்துள்ளார்.

மே மாதம் நடந்த சம்பவம் குறித்த புகாரில் ரத்த காயம் ஏற்பட்டு ஜூன் மாதம் வரை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மழுப்பி மழுப்பி பேசுவது, பணம் கொடுத்தவருக்கு விசுவாசம் ஆக வாலாட்டுவது என்று எஸ் எஸ் ஐ மனோகரன் செயல்பட்டு வருவது காட்பாடி பகுதி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்றே சொல்லலாம். இந்த எஸ் எஸ் ஐ மனோகரன் மீது பல்வேறு புகார்கள் இருந்த போதிலும் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி இவர் மீது ஏனோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை பொத்தி பொத்தி காட்பாடி காவல் நிலையத்திலேயே பணியாற்ற வைத்துள்ளார்.

அது எதற்கு என்று தெரியவில்லை. இந்த சிதம்பர ரகசியம் தெரிந்தால் அனைத்தும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடுநிலையுடன் நடந்து கொள்ளாமல் பணம் கொடுப்பவர்களுக்கு நியாயம் என்று செயல்படும் மனோகரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் காவல் சரக டிஐஜி தேவராணியும் காட்பாடி காவல் நிலையத்தில் நடைபெறும் இது போன்ற கட்டப்பஞ்சாயத்துகள் மற்றும் பணம் வாங்கிக்கொண்டு காவல்துறையில் ஒளிந்துள்ள கருப்பு ஆடுகளை களை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS