BREAKING NEWS

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிக்காட்டும் போட்டிகள்.

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிக்காட்டும் போட்டிகள்.

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிக்காட்டும் வகையில் கேரம், செஸ் உள்ளிட்ட 21 போட்டிகள், 5 மாவட்ட பள்ளிகள் பங்கேற்பு

 

 

தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ மாணவ மாணவிகளுக்கு பன்முக திறமையை வெளிகாட்டும் வகையில் தொழில்நுட்பப் போட்டி, சமூக அக்கறை சார்ந்த போட்டி, விளையாட்டு, கலைத்துறை, பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், காகித கைவினை, வினாடி வினா, விவாதம், சுவரொட்டி தயாரித்தல், உச்சரிப்பு மற்றும் சரியான எழுத்து எழுதுதல், மேடை மௌன நாடகப் போட்டி, கேரம், செஸ், ஆகிய 21 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

 

 

இப்போட்டியில் தஞ்சை திருச்சி அரியலூர் புதுக்கோட்டை திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 280 பள்ளிகள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

 

 

இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகிறது, இப் போட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )