தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி தஞ்சை மேம்பாலம் ரெட்கிராஸ் அலுவலகத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து, அவரும் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். இப்பிரசாரத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இண்டாக் செயலாளர் முத்துக்குமார், உள்ளிட்ட போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாகன பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது.