தஞ்சாவூரில் விபத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் இரண்டு சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர்.
தஞ்சை மாவட்ட காவல்துறை போக்குவரத்து பிரிவு சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் வாகனங்களின் முன்புற முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர்.
மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து தொடர்பான விதிமுறைகள் விளக்கி கூறப்பட்டது., இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தப்பாட்ட கலைஞர்கள் தப்பாட்டம் ஆடி பொதுமக்களை ஈர்த்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர் போக்குவரத்து காவல் பிரிவுதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வாகன ஓட்டிகள்வாகனவிழிப்புனராவு