தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா; ஆளுநர், அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது ,இதில் கடந்த நான்கு கல்வியாண்டில் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவை கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா மேடையில் துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில் 450 எம்பில் பட்டங்கள், 32 டாக்டர் பட்டங்கள் 119 முதுகலை பட்டங்கள் , 257 பி.எட் பட்டங்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 840 பட்டங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
அதனை தொடர்நது ஆளுநர் ஆர் என் ரவி மாணவர்களுக்கான உறுதி மொழி வாசிக்க, பட்டம் பெற்றவர்கள் ஆளுநர் முன் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.