தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.

தமிழக அரசு விளை நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வருக்கு உணர்த்தும் வகையில் தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் நெல்,தென்னை, வெற்றிலை, காய்கறிகள் ஆகியவை விளையும் விளைநிலங்களை அழித்துவிட்டு புறவழிச்சாலை அமைப்பதை கைவிட்டு திமுக ஏற்கனவே கூறிய வாக்குறுதி படி திருவையாறு பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி விவசாயிகள் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி நான்கு நாள் போராட்டத்திற்கு பிறகு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததனால்,
நேற்று மீண்டும் இரண்டாவது கட்ட உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் தலைகீழாக நின்று போராடினர் விளைநிலங்களை தமிழக அரசு அளித்து விட்டால் தங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தும் வகையில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர்.