BREAKING NEWS

தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியதா!?

தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியதா!?

நயன் தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்ற விவகாரத்தில் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது…

 

அதன்படி இன்று அரசின் நான்கு பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நயன் விக்கி வாடகைத்தாய் குழந்தை விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 மருத்துவமனை வாடகைத்தாய் விவகாரத்தில் விசாரணையில் நயன் விக்கி தம்பதி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே குழந்தைகள் பெற்றது தெரிய வந்துள்ளது. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வாடகை தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ள அடிப்படையில் அவர் வாடகைத்தாயாக நியமிக்கப்பட்டுள்ளதும் முறைப்படி நடந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதேபோல் தம்பதி திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவுப்பெற்றிருக்க வேண்டும் என்கிற விதிப்படி நயன் – விக்கி தம்பதி 2016, மார்ச் 11ல் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் சமர்ப்பித்துள்ளதால் அந்த விதியும் மீறப்படவில்லை ஆகவே நயன் விக்கி தம்பதி விதிமீறலில் ஈடுபடவில்லை என கூறப்பட்டுள்ளது.

 

ஆனால்.., சினைமுட்டை விவகாரங்களையும், வாடகைத்தாய், பெறுபவர்கள் விவரங்களை சரிவர சேமித்து வைக்காமல் இருந்ததாக மருத்துவமனையில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனைக்கு விளக்கம் கேட்கப்பட்டு அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )