BREAKING NEWS

தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.

தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.

தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன சூப்பர் மார்க்கெட்டை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த ஆதின சைவ திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் சார்பில் மடத்தின் உட்புறம் பொதுமக்கள் மற்றும் ஆதீன கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் ஊழியர்கள் திருமடத்து பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீன 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பொருட்கள் தரமானதாகவும் விலை மலிவாகவும் இருக்கும் வகையில் சூப்பர் மார்க்கெட் துவக்கப்பட்டுள்ளதாகவும்,

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இதுபோல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குரு மகா சன்னிதானம் ஆசி உரையின்போது தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிரிமியர் நிறுவனங்களின் தலைவர் சௌந்தரராஜன், தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி செயலாளர் செல்வநாயகம் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS