BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆண்டிபட்டி 3 வார்டு 3 வது எண் வாக்குச்சாவடியில் கள்ளஓட்டு போட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ஆண்டிபட்டி 3 வார்டு 3 வது எண் வாக்குச்சாவடியில் கள்ளஓட்டு போட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
ஓட்டுப்போடவந்த ராஜ்குமார் மற்றும் மகாலட்சுமி ஆகிய இரண்டு வாக்காளர்கள் தங்களது ஓட்டை ஏற்கனவே வேறு நபர்கள் போட்டு விட்டதாக புகார் கூறியதை அடுத்து பரபரப்பு .

ஆண்டிபட்டி பேரூராட்சி தேர்தல் 18 வார்டுகளிலும் உள்ள 9 மையங்களில் முப்பத்தி ஒன்று வாக்குச்சாவடிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது .மூன்றாவது வார்டுக்கு உரிய மூன்றாவது எண் வாக்குச்சாவடி அமைந்துள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது . மூன்றாவது வார்டு பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மகாலட்சுமி ஆகிய இரண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்கை அளிக்க வந்தபோது உங்களது வாக்குகள் ஏற்கனவே போடப்பட்டன என்று தேர்தல் அலுவலர்கள் கூறினார்கள் . இதனால் அதிர்ச்சி அடைந்த இரண்டு வாக்காளர்கள் தாங்கள் தற்போதுதான் வாக்களிக்க வந்ததாகவும் வேறு யாரோ தங்களதுவாக்கை போட்டுச் சென்றதாகவும் தேர்தல் அலுவலரிடம் புகார் கூறினார்கள் . இதை ஏற்க மறுத்த அலுவலர்கள் உங்களது வாக்கு ஏற்கனவே போடப்பட்டதால் மீண்டும் வாக்களிக்க முடியாது என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்கள் . இதனால் கோபமடைந்த ராஜ்குமார் மற்றும் மகாலட்சுமி ஆகிய இரண்டு வாக்காளர்கள் வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்குவாதம் செய்ததால் வாக்குச்சாவடியில் பெரும்பரபரப்பு நிலவியது . அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் உரிய முறையில் புகார் அளிக்க கூறியதை அடுத்து ஆண்டிபட்டி தேர்தல் அலுவலர் சின்னசாமி பாண்டியனிடம் புகார் தெரிவித்துள்ளனர் . ஆண்டிபட்டி பேரூராட்சி 3 வது வார்டு மூன்றாம் எண் வாக்குச்சாவடியில் இரண்டு கள்ளஓட்டுக்கள் போடப்பட்டதாக எழுந்த புகார் ஆண்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )