BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை.

இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு கடந்த 18ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தேர்தல் பணிக்கு சென்ற 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்படுமோ என்ற கருத்தும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மிழகத்தில் நாளை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பள்ளிகள் அனைத்து வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )