BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு பிரபல ரவுடி கைது.

தஞ்சை அடுத்த ஆலக்குடி பில்லுக்கார தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 25). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தஞ்சை அடுத்த கூடலூர் புதுத்தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (38) வந்தார். திடீரென அவர் கத்தியை காட்டி மிரட்டி தாமோதரனிடம் இருந்து பணம் பறித்தார்.
இது குறித்து தாமோதரன் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் ஜெயக்குமார் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் உள்ளதும், பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )