BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சேலம் மாவட்டம் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் காட்டெருமை மோதியதில் வாலிபர் பலி.

சேலம் மாவட்டம் ஏற்காடு செஞ்திட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் .வயது23 தகப்பனார் பெயர் கோவிந்தன். இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சேலம் குப்பனூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குறுக்கே வந்த காட்டெருமை மோதியதில். கிருபாகரன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதை அறிந்த ஏற்காடு காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர் . மற்றும் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இறந்தவர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மற்றும் ஏற்காடு காவல் ஆய்வாளர் ரஜினி .தலைமையில் காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திக் கொண்டுள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )