திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்பாண்டி (31) என்பவரிடம் SBI வங்கியிலிருந்து அனுப்புவது போல் மர்ம நபர் KYC Update செய்ய சொல்லி அனுப்பிய Link -ன் வழியாக தகவல்களை பெற்று ரூ.1 லட்சம் பணத்தை நூதன முறையில் ஏமாற்றியதாக புகாரின் அடிப்படையில்,
SP.பாஸ்கரன் உத்தரவின்படி சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1,00,000/- பணத்தை மீட்டனர்.
இதையடுத்து இன்று SP. பாஸ்கரன் புகார்தாரர் விக்னேஷ்பாண்டியிடம் ரூ.1 லட்சம் பணத்தை ஒப்படைத்தார்.
CATEGORIES திண்டுக்கல்
