BREAKING NEWS

திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்.

திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் இளையராஜா மற்றும் மருத்துவ குழுவினர் ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, பொது பரிசோதனைகள் உள்ளிட்டவைகள் மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்து மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகளை வழங்கினார்கள்.

திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் 162 தூய்மை பணியாளர்கள் பரிசோதனை கலந்து கொண்டனர். இதில் மருத்துவர்கள், சுகாதார துறையினர், தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS